×

காங். வேட்பாளர் சர்மா உருக்கம்: காந்தி குடும்பம் கேட்டால் அமேதியை திருப்பி தந்து விடுவேன்

அமேதி: “உத்தரபிரதேச அமேதி தொகுதி காந்தி குடும்பத்தின் பாரம்பரியம், அவர்கள் அதை எப்போது கேட்டாலும் திருப்பி தந்து விடுவேன்” என காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா உருக்கமாக தெரிவித்துள்ளார். உத்தரபிரசேத்தின் அமேதி தொகுதிக்கு 5ம் கட்டமான மே 20ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இங்கு நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு கிஷோரி லால் சர்மாவை காங்கிரஸ் நிறுத்தி உள்ளது. பாஜ வேட்பாளராக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அமேதியின் முசாஃபிர்கானாவில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் கிஷோரி லால் சர்மா கலந்து கொண்டு பேசினார். அப்போது, “பாஜ ஆட்சியில் அமேதி தொகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனம், காகித உற்பத்தி ஆலைகள், பெரும் உணவுப் பூங்கா போன்ற பல நிறுவனங்கள் அமேதியில் இருந்து இடம் பெயர்ந்துள்ளன. அமேதி – உஞ்சஹார் ரயில் பாதை திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அமேதி தொகுதி காந்தி குடும்பத்தின் பாரம்பரியம். அவர்கள் தொகுதியை அரசியல் ரீதியாக பார்க்கவில்லை அங்குள்ள மக்களை தங்கள் குடும்ப உறுப்பினர்களாகவே நினைக்கின்றனர். விலை மதிப்பற்ற இந்த தொகுதியில் காங்கிரஸ் என்னை நிறுத்தி உள்ளது. அவர்கள் எப்போது கேட்டாலும் நான் தொகுதியை தந்து விடுவேன்” என்று தெரிவித்தார்.

The post காங். வேட்பாளர் சர்மா உருக்கம்: காந்தி குடும்பம் கேட்டால் அமேதியை திருப்பி தந்து விடுவேன் appeared first on Dinakaran.

Tags : Kong ,Sharma Urukam ,Amethi ,Gandhi ,Uttar Pradesh ,Congress ,Kishori Lal Sharma ,Uttarpraseth ,Sharma Urukkam ,
× RELATED நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு;...